Sunday, October 31, 2021

மீலாது சிறப்பு நிகழ்ச்சி 19.10.2021

 

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 19.10.2021 செவ்வாய் அன்று காலை 09:30 மணியளவில் நம் நிஸ்வானில் மீலாது சிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

அந்தப் பகுதி ஆண்களும் பெண்களும் மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்பட திரளாகக் கலந்து கொண்டனர்.

ஒரு முழு குர்ஆன் ஓதி கத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து மவ்லிது ஷரீப், அனைவரும் சேர்ந்து பல நூறு முறை சலவாத்து ஓதி, நிறைவாக துஆ செய்யப்பட்டது. 

Saturday, October 30, 2021

first convocation - 2021 நம் நிஸ்வானின் முதல் பட்டமளிப்பு விழா

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 04.04.2021  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் 2 மாணவிகள் ஆலிமா முஹ்ஸினா பட்டமும்,  
4 மாணவிகள்  முபல்லிஹா பட்டமும் பெற்றார்கள்.
 
இதில் நம் அறக்கட்டளையின் தலைவர் மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் உள்பட கண்ணியமிகு டிரஸ்டிகள், நிர்வாகப் பெருமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், சுற்று வட்டார மக்கள், பெற்றோர்கள், மாணவியர்,
திரளாகக் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் !

நிஸ்வான் நூலகம்

Manbaul Hasanaath Niswan Arabic College

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் (மகளிர்) அரபிக் கல்லூரி

இஸ்லாமிய சமுதாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் நமது பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளையின் கீழ் 26.02.2018 (ஹிஜ்ரி 10.06.1439) மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி துவங்கியது.

திறமைமிக்க அனுபவமுள்ள உலமாக்கள் ஆலிமாக்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

Friday, October 29, 2021

S.Syed Fathima Samina Alima Muhsina

 S. Syed Fathima Samina  Alima Muhsina 

ஆலிமா செய்யது பாத்திமா ஸமீனா முஹ்ஸினா அவர்கள் 

நம் மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபுக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து கடந்த 2021 ஏப்ரலில் ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார்.

தற்பொழுது நமது நிஸ்வானிலேயே ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


J .sabura buhari sharifa Alima Musliha

 ஜா.சபுரா புஹாரி ஷரிஃபா ஆலிமா முஸ்லிஹா

தூத்துக்குடி ரஹ்மத் நகர் இஸ்லாஹுல் பனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து 2016 - இல் ஆலிமா ஸனது (Diploma) பெற்றார்.

கல்வி பயின்று முடிந்ததும். அதே மதரஸாவில் 2 ½ வருடம் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து நமது P & T காலனி, "மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூாரி" யில் ஆசிரியையாகப்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ் !

Moulavi Alhafil J.Samsudeen Maslahi B.A.,


மவ்லவி அல்ஹாபிழ் J.சம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.

 2000 ல் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் மதரஸா  ஜாமிவுல் அன்வாரில் ஹாபிழ் பட்டம் பெற்றார்கள்.

பின்னர், 2001- 2007 வரை தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் பயின்று 2007ல்  ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

அதே ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University of Madras) B.A.,முடித்தார்கள்.

Thursday, October 28, 2021

நபி வாழும் மா மதினா - Nabi Vaazhum Maamadhina Tamil Islamic Song


 நபி வாழும் மா மதினா
நான் அங்கு வருவேனா
பூ மணக்கும் உங்கள் ரவ்ளா
கண்ணால் நான் தழுவேனா
நபி உம்மைக் காணத்தான் 
என் ஜீவன் வாழுது 
விடுகின்ற மூச்செல்லாம் 
உம் வதனம் தேடுது

ஜவஹர் இஸ்லாமிக் சென்டர் - Islamic Shop In Thoothukudi

 தூத்துக்குடி அண்ணா நகரில் ஜவஹர் இஸ்லாமிக் சென்டர்


எங்களிடம் குர்ஆன், ரேகாலி, தொப்பி பர்தா, ஷால் வகைகள், மக்கன்னா,

இஹ்ராம் உடைகள், அத்தர், லுங்கி, ஹதீஸ் நூற்கள், தஸ்பீஹ்மணி, அரபு நாட்டு பேரீத்தம் பழம், மதரஸா பாட கிதாப்கள்,

Wednesday, October 27, 2021

Moulavi S.S.Abubakar Sithik Maslahi B.A.,


மவ்லவி S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., அவர்கள்

தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று1996 ல் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் வந்து சேர்ந்தார்கள்.

 1999 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2006 ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

 சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஏ.(அரபிக்)பட்டப்படிப்பு நிறைவு செய்தார்கள்.

Friday, October 22, 2021

அஸ்மாவுல் ஹுஸ்னா ராத்திப் - Ratib Asmaul Husnah download link



நம் நிஸ்வானில் வாராந்திர சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ராத்திப் அஸ்மாவுல் ஹுஸ்னா ஓதப்படும். 

ஓதுவதற்கும் கேட்பதற்கும் ரம்மியமான இந்த ராத்திப் தேவையுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். download

Monday, October 18, 2021

மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி - 2021

 மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

19.10.2021 செவ்வாய் காலை 9.30 மணி

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி

🔹 குர்ஆன் திலாவத் மஜ்லிஸ்
🔹 சுப்ஹான மவ்லிது ஷரீஃப்
🔹 ஸலவாத் ஓதுதல்
🔹 சிறப்பு துஆ

Friday, October 15, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் மவ்லிது ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி



இன்ஷா அல்லாஹ்,
🗓️ 16.10.2021 சனிக்கிழமை
⏰ மதியம்  2.30 - 5.00 மணி வரை

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

J.ரஜப் நிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- நாயகத்தின் ﷺ நற்பண்புகள்

Friday, October 8, 2021

பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் (09.10.2021)



🗓️ 09.10.2021 சனிக்கிழமை
 மதியம்  2.30 – 5.00 மணிவரை.
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி, தூத்துக்குடி.
 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
I. ஸாலிஹா
(2-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் !
S. சுமைய்யா மிஃராஜ்
(1-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- பொறுமை

Saturday, October 2, 2021

கேள்வி பதில் 25.09.2021


 ஒரு மனித மூளையிலுள்ள நினைவாற்றல் memory Power அளவு என்ன ?

2.5 மில்லியன் GB

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் 2 நிலைகளில் அல்லது சந்தர்ப்பங்களில் தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் மனக் கண்ணால் (ரூஹ்) காணக் கூடிய வாய்ப்பு உண்டு. 

அவை என்ன ?

சக்ராத்துல் மவ்த் துடைய நிலையில் உறுப்புகள் சலனமற்று இருக்கும் கண்கள் மூடி இருக்கும் உயிர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில்,

فكشفنا عنك غطائك فبصرك اليوم حديد

என்று அல்லாஹ் கூறுகிறான் இந்த நேரத்தில் உன் திரையை அகற்றி விட்டோம் இப்பொழுது உன் அகக் கண்ணின் பார்வை கூர்மையாக இருக்கிறது

இந்த நிலையில் அவன் நல்லவனாக இருந்தால் சொர்க்கத்தின் இன்பமான காட்சிகளை அவன் காண்பான். கெட்டவனாக இருந்தால் நரகத்தின் கொடூரக் காட்சிகளை காண்பான் ஆனால் அதை அவனால் பேச முடியாது.

இரண்டாவது நிலை : தூக்கம் 

ஒரு மனிதன் தூங்குகிற பொழுதும் உறுப்புகள் சலனமற்று இருக்கிறது கண்கள் மூடி இருக்கிறது ஆனால் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் அவன் கனவில் தூர தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் பார்க்கிறான்

பல நாடுகளின் காட்சி பல இடங்களின் காட்சி .. ஏன் மறுமை வரைக்கும் கூட கனவில் காண முடிகிறது.

இந்த இரண்டு நிலைகளிலும் உள்ள அந்த மவுன நிலையை அடிப்படையாக வைத்து, 

 முராக்கபா என்ற தியானத்தை அமைதியான நேரத்தில் செய்துவந்தால், அகக் கண்ணை மூடி இருக்கிற திரை விலகி அற்புதமான காட்சிகளை பார்க்கவும் படிக்கவும் இயலும்

சரியான பதில் எழுதிய அறிவுஜீவிகள்

சாலிஹா

A. ஆயிஷா பேகம்

ஆயிஷா பீவி

சுமைய்யா மிஃராஜ் 

சிலர் 1 கேள்விக்கு மட்டும் சரியான விடை எழுதியிருந்தனர். 

பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக !


வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா நிகழ்ச்சி - 4



🗓️ 02.10.2021 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 
 2.30 - 5.00 மணி வரை 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

M . ஆயிஷா பீவி
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- அகிலத்திற்கு ஓர் அருட்கொடை

M. ஜன்னத்துல் ரிஃபாயா
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- ஸதகாவின் சிறப்பு

A . ஆயிஷா பேகம்
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு: குர்ஆன் ஓதுவதின் சிறப்பு.

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல் ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி B.A. (Arabic)  அவர்கள்
(பேராசிரியர், MH நிஸ்வான், P & T காலனி, தூத்துக்குடி)
📝  தலைப்பு:
  வள்ளல் நபி யைப் போல வாழ்வோம் வாருங்களேன் !

⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 அருமையான  அஸ்மாவுல் ஹுஸ்னாவுடன் சமூகத்தின் நலனுக்காக சிறப்பு துஆ  செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN