Showing posts with label மீலாது. Show all posts
Showing posts with label மீலாது. Show all posts

Tuesday, October 25, 2022

தூத்துக்குடி மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் 1.5 கோடி ஸலவாத் சமர்ப்பணம்



1.5 கோடி ஸலவாத் சமர்ப்பணம்

நாள்: 26.10.2022 புதன்கிழமை, 
நேரம் : அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை 
இடம் : மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி 
பி&டி காலனி, தூத்துக்குடி.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பி&டி காலனி மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லுரி மாணவியர்கள் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் ஓதிய ஒன்றரை கோடி ஸலவாத்தை (ஈஸால் ஸவாப்) சமர்ப்பித்து, சிறப்புப் பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி

நம் கல்லூரியின் நிறுவனத்தலைவர் 
மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் ஹழ்ரத் 
(தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி)

அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது அதில் மாநகர ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரன்பையும் பெரும் ஷஃபாஅத்தையும் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்

அழைப்பின் மகிழ்வில்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி 
பி&டி காலனி, தூத்துக்குடி.
Cell: 86829 44818, 9994073781

Sunday, October 31, 2021

மீலாது சிறப்பு நிகழ்ச்சி 19.10.2021

 

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 19.10.2021 செவ்வாய் அன்று காலை 09:30 மணியளவில் நம் நிஸ்வானில் மீலாது சிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

அந்தப் பகுதி ஆண்களும் பெண்களும் மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்பட திரளாகக் கலந்து கொண்டனர்.

ஒரு முழு குர்ஆன் ஓதி கத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து மவ்லிது ஷரீப், அனைவரும் சேர்ந்து பல நூறு முறை சலவாத்து ஓதி, நிறைவாக துஆ செய்யப்பட்டது.