பூ மணக்கும் உங்கள் ரவ்ளா
கண்ணால் நான் தழுவேனா
நபி உம்மைக் காணத்தான்
என் ஜீவன் வாழுது
விடுகின்ற மூச்செல்லாம்
உம் வதனம் தேடுது
நபி உம்மைக் காணாமல்
வாழ்வும் அது வலிக்கிறது
விடுகின்ற மூச்செல்லாம்
கசப்பாகத் தெரிகிறது
என் விழிகள் மூடிக் கொண்டு
உம் முகத்தைத் தேடினேன்
கண் திறந்து பார்க்கின்றேன்
கண்ணீர் சுரக்க நிற்கின்றேன்
கண்ணீரும் ஓடியதே
காருண் நபி முகம் காண
ஓடிய நீர் வாடியதே
காணவில்லை உம் முகமே
நான் கண்ட கனவெல்லாம்
காற்றோடு கரைந்திடுமா
நபி உம்மைக் காணும் ஏக்கம்
தீராமல் போய்விடுமா
நான் செய்யும் பாவங்கள்
திரையாய் வந்து நின்றிடுமா
நபி உங்கள் காதலினால்
அந்த திரை கிழிந்து வழிவிடுமா
மரக்கட்டை ஏங்கியதே அதன்
ஏக்கங்களை தீர்த்தீரே
நான் இங்கு கதறுகிறேன்
என் கண் முன்னே வருவீரே
இல்லை என்ற வார்த்தையே
மொழியா எந்தன் குருவே
பாவி எங்கள் ஏக்கம் தீர
திருக் காட்சி அருள்வீரே
No comments:
Post a Comment