Saturday, October 2, 2021

கேள்வி பதில் 25.09.2021


 ஒரு மனித மூளையிலுள்ள நினைவாற்றல் memory Power அளவு என்ன ?

2.5 மில்லியன் GB

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் 2 நிலைகளில் அல்லது சந்தர்ப்பங்களில் தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் மனக் கண்ணால் (ரூஹ்) காணக் கூடிய வாய்ப்பு உண்டு. 

அவை என்ன ?

சக்ராத்துல் மவ்த் துடைய நிலையில் உறுப்புகள் சலனமற்று இருக்கும் கண்கள் மூடி இருக்கும் உயிர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில்,

فكشفنا عنك غطائك فبصرك اليوم حديد

என்று அல்லாஹ் கூறுகிறான் இந்த நேரத்தில் உன் திரையை அகற்றி விட்டோம் இப்பொழுது உன் அகக் கண்ணின் பார்வை கூர்மையாக இருக்கிறது

இந்த நிலையில் அவன் நல்லவனாக இருந்தால் சொர்க்கத்தின் இன்பமான காட்சிகளை அவன் காண்பான். கெட்டவனாக இருந்தால் நரகத்தின் கொடூரக் காட்சிகளை காண்பான் ஆனால் அதை அவனால் பேச முடியாது.

இரண்டாவது நிலை : தூக்கம் 

ஒரு மனிதன் தூங்குகிற பொழுதும் உறுப்புகள் சலனமற்று இருக்கிறது கண்கள் மூடி இருக்கிறது ஆனால் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் அவன் கனவில் தூர தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் பார்க்கிறான்

பல நாடுகளின் காட்சி பல இடங்களின் காட்சி .. ஏன் மறுமை வரைக்கும் கூட கனவில் காண முடிகிறது.

இந்த இரண்டு நிலைகளிலும் உள்ள அந்த மவுன நிலையை அடிப்படையாக வைத்து, 

 முராக்கபா என்ற தியானத்தை அமைதியான நேரத்தில் செய்துவந்தால், அகக் கண்ணை மூடி இருக்கிற திரை விலகி அற்புதமான காட்சிகளை பார்க்கவும் படிக்கவும் இயலும்

சரியான பதில் எழுதிய அறிவுஜீவிகள்

சாலிஹா

A. ஆயிஷா பேகம்

ஆயிஷா பீவி

சுமைய்யா மிஃராஜ் 

சிலர் 1 கேள்விக்கு மட்டும் சரியான விடை எழுதியிருந்தனர். 

பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக !


No comments:

Post a Comment