Thursday, September 30, 2021

Moulavi S.S.Abdur Rahman Maslahi Fazil Deoband

 

மவ்லவி S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று
1988 ல் தஞ்சாவூர் ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் சேர்ந்தார்கள்.
 
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் 1992 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2002ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.
அதன் பின்னர் தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் ஃபாழில் பட்டம் பெற்று மார்க்கச் சேவையில் நுழைந்தார்கள்.

Friday, September 24, 2021

பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் 3

 

🗓️ 25.09.2021 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 
 2.30 மணியளவில்

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

S. சுமைய்யா மிஃராஜ்
 (முதல் வருட ஆலிமா மாணவி
தலைப்பு :- வெட்கம்

J.ரஜப் நிஷா  ( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : - ஸலவாத்தின் சிறப்பு

S. ஸாஹின் பானு
(முதலாம் ஆண்டு முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- உறவைப் பேணுவோம்.

S. ஆமீனா  (முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- ஆயத்தல் குர்ஸி

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
📝  தலைப்பு:
  வேண்டுமா சுவனம்? வேண்டும் கவனம் !

⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 பூமான் நபி ﷺ அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்படும்
 
⏲️ 4.30 மணிக்கு
🤲 
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Tuesday, September 21, 2021

விரோதியை வெல்ல.. வியாதியைக் கொல்ல.. இதை வழக்கப் படுத்துங்களேன்!

 


அல்லாமா இமாம் கஸ்ஸாலி  (ரஹ்) கூறுகின்றார்கள்:

ஒரு அனுபவபூர்வமான குறிப்பு

கஷ்டங்கள் நீங்குவதற்கும் எதிரிகளை பலம் குன்றச் செய்வதற்கும் சுருக்கமாகச் சொன்னால் விரோதியை வெல்லவும் வியாதியை விரட்டவும் அற்புதமான ஒரு டிப்ஸ்.


சுபுஹு தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் முதலாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்குப் பிறகு அலம் நஷ்ரஹ் என்ற சூராவையும் இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூரா வுக்குப் பிறகு அலம் தர கைஃப என்று சூராவையும் வழமையாக ஓதி வந்தால் இந்தப் பலன்கள்  கிடைப்பது நிச்சயம் சந்தேகமே வேண்டாம் !


யார் இந்த இரண்டு ரக்அத்துகளில் “அலம் அலம்” என்ற இந்த இரண்டு சூராவையும் ஓதுகின்றாரோ அந்த நாளில் அவருக்கு எந்த الم  வலி வேதனை வருத்தமும் இருக்காது


இதை வழக்கப் படுத்திய நல்லவர்கள் பலரும் தங்கள் அனுபவத்தை சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக மூலவியாதி அதனுடைய வலியும் வருத்தமும் குறைந்து முற்றிலும் இல்லாமல் போன அனுபவங்கள் உண்டு; பகைமை குறைந்து பாசம் அதிகரித்த அனுபவங்கள் உண்டு!

ذَكَرَ الْعَلَّامَةُ الْغَزَالِيُّ فِي كِتَابِ وَسَائِلِ الْحَاجَاتِ وَآدَابِ الْمُنَاجَاةِ مِنْ الْإِحْيَاءِ

 أَنْ مِمَّا جُرِّبَ لِدَفْعِ الْمَكَارِهِ وَقُصُورِ يَدِ كُلِّ عَدُوٍّ وَلَمْ يَجْعَلْ لَهُمْ إلَيْهِ سَبِيلًا قِرَاءَةُ {أَلَمْ نَشْرَحْ} [الشرح: 1] وَ {أَلَمْ تَرَ كَيْفَ} [الفيل: 1] فِي رَكْعَتَيْ الْفَجْرِ قَالَ وَهَذَا صَحِيحٌ لَا شَكَّ فِيهِ.

(و) ركعتان قبل (صبح)، ويسن تخفيفهما.

وقراءة الكافرون والاخلاص فيهما، لخبر مسلم وغيره، وورد أيضا فيهما ألم نشرح لك وألم تر كيف، وأن من داوم على قراءتهما فيهما زالت عنه علة البواسير

 

من صلاهما بألم وألم لم يصبه في ذلك اليوم ألم.

وحَدثني أَبُو الْفضل مُحَمَّد عبد الله بن الْمَرْزُبَان الشِّيرَازِيّ الْكَاتِب، فِي المذاكرة، فِي خبر طَوِيل، لست أقوم على حفظه: أَن رجلا كَانَت بَينه وَبَين رجل مُتَمَكن من أَذَاهُ عَدَاوَة، فخافه خوفًا شَدِيدا، وأهمه أمره، وَلم يدر مَا يصنع.

فَرَأى فِي مَنَامه، كَانَ قَائِلا يَقُول لَهُ: اقْرَأ فِي كل يَوْم، فِي إِحْدَى رَكْعَتي صَلَاة الْفجْر، ألم تَرَ كَيفَ فعل رَبك بأصحاب الْفِيل إِلَى آخر السُّورَة.

قَالَ: فقرأتها، فَمَا مَضَت إِلَّا شهور، حَتَّى كفيت أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله تَعَالَى، فَأَنا أقرؤها إِلَى الْآن.

قَالَ مؤلف هَذَا الْكتاب: دفعت أَنا إِلَى شدَّة لحقتني شَدِيدَة، من عَدو، فاستترت مِنْهُ، فَجعلت دأبي قِرَاءَة هَذِه السُّورَة فِي الرَّكْعَة الثَّانِيَة من صَلَاة الْفجْر، فِي كل يَوْم، وَأَنا أَقرَأ فِي الأولة مِنْهَا: ألم نشرح لَك صدرك إِلَى آخر السُّورَة، لخَبر كَانَ بَلغنِي أَيْضا فِيهَا، فَلَمَّا كَانَ بعد شهور، كفاني الله أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله من غير سعي لي فِي ذَلِك، وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه، وَأَنا أقرؤها فِي رَكْعَتي الْفجْر إِلَى الْآن. كتاب: الفرج بعد الشدة للتنوخي

 

Sunday, September 19, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் - 2



நாள்: 18.09.2021 சனிக்கிழமை 
நேரம்: சரியாக மதியம்  2.30 மணியளவில் 
இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,  p&t காலனி 
 

கஷ்டங்கள் கவலைகள் போக்கும் சுலபமான (மந்திரம்) கலிமா




 கஷ்டங்கள் கவலைகள் போக்கும்  சுலபமான (மந்திரம்) கலிமா 
 
அலி ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் கஷ்டத்தில் விழுந்தால் அதிலிருந்து விடுதலை ஆவதற்கு சொல்லும் வார்த்தையை உமக்குக் கற்று தரட்டுமா?
 
அல்லாஹ்வின் தூதரே ! அவசியம் சொல்லித் தாருங்கள்!அல்லாஹ் என்னையே  தங்களுக்கு அர்ப்பணமாக ஆக்கட்டும்!  எத்தனையோ நல்ல காரியங்களை நீங்கள் தானே எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் அதே போல இதையும் சொல்லுங்கள்.
 
ஏதேனும் ஒரு கஷ்டத்தில் நீர் சிக்கிக்கொண்டால் சொல்ல வேண்டிய வார்த்தை
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்
 
இதைக் கூறினால்  அனைத்து வகையான துன்பங்கள், துயரங்களை விட்டும் அல்லாஹ் உம்மைக்  காப்பாற்றுவான்
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்பது தொண்ணூற்று  ஒன்பது நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் ஆக குறைந்தது கவலையாகும்.
 
إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ
عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ قُلْتَهَا» قُلْتُ: بَلَى جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، فَرُبَّ خَيْرٍ قَدْ عَلَّمْتَنِيهِ، قَالَ: " إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ فَقُلْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ 
 
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَيْسَرُهَا الْهَمُّ»

Saturday, September 18, 2021

கேள்வியும் பதிலும் - 2

 கேள்வி : 2

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த வாரம் 11 செப்டம்பர் 2011 சனி மதியம் நமது நிஸ்வான் 

மதரசாவில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சிறப்புரையிலிருந்து 

கேட்கப்பட்ட கேள்விகள் :

 

  1. கஸீதத்துல் புர்தாவை இயற்றிய கவிஞர் யார் ?

 

2.        டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது 

இந்த மன்னரின் கனவில் நபியவர்களே வந்து 

இந்த இடத்தில் தோண்டினால் நல்ல தண்ணீர் வரும் 

என்று கூறியதற்கு இணங்க அங்கு தோண்டப்பட்டு

 குத்பு சாகிப் குளம்என்ற 

பெயரில் அந்த இடம் அழைக்கப்படுகிறது.

 நபி அவர்கள் மீது தீராத காதல் கொண்டு அதிகம்

 ஸலவாத்து ஓதுவது 

வழக்கமாக வைத்திருந்த அந்த மன்னர் யார் ?

 

  1. அல்லாமா ஷரபுத்தீன் அல் பூஸிரி (ரஹ்)

 

2.        மாமன்னர் இல்துமிஷ் 


சரியான விடை எழுதிய அறிவுஜீவிகள் :

ஆயிஷா பேகம் 

சாலிஹா 

ஸமீனா முஹ்ஸினா

 

பாத்திமா ஃபர்ஹானா ஜுவைரிய்யா 

பைரோஸ் நிஹார்

 ஆயிஷா பீவி 

சுமையா மிஃராஜ் 

ஸஃப்ரின் பர்வீன்

 ரஜபுன் நிஷா 

S. ஷாஹீன்

இவர்களில் மூவரை குலுக்கல் முறையில் 

தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது.

 பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ் 

பேரருள் புரிவானாக

 

இதை வழமைப் படுத்தினால் வாழ்க்கையே மாறும் !


أن رجلاً جاء إلى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: تولت عني الدنيا وقلت ذات يدي، فقال له رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فأين أنت من صلاة الملائكة وتسبيح الخلائق وبها يرزقون» ، قال فقلت: وما هي يا رسول الله؟ قال: «سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله مائة مرة ما بين طلوع الفجر إلى أن تصلي الصبح، تأتيك الدنيا راغمة صاغرة، ويخلق الله من كل كلمة ملكاً يسبح الله إلى يوم القيامة لك ثوابه»
 ஒரு தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே ! இந்த உலகம் என்னை விட்டும் முகம் திருப்பிக் கொண்டது.. பொருளாதாரம் குறைவாக இருக்கிறது" என்று முறையிட்டபோது

அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : அனைத்து வானவர்களும் ஓதக் கூடிய ஒரு பிரார்த்தனை, அனைத்து ஜீவராசிகளும் சொல்லக்கூடிய தஸ்பீஹ் ! அது உனக்கு தெரியாதா ? அதை அனைத்து படைப்புகளும் ஓதுகிற காரணத்தினால்தான் அவைகளுக்கு இரண பாக்கியம் இறங்குகிறது

"நாயகமே ! அது என்ன ?"


அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி சலாம் சொன்னார்கள்
سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ் (100)
இதை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ரு உதயமாகும் நேரம் தொடுத்து பஜ்ரு தொழுகை முடிகிற அந்த நேரத்திற்குள் நூறு தடவை வழமையாக ஓதி வா ! இந்த உலகம் உனக்காக பணிந்து வரும் !"
அவர் சொல்கிறார்: இதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் நான் வழமையாக ஓதிவந்தேன். என்ன ஆச்சரியம் ! அல்லாஹ் என் மீது இரண பாக்கியத்தை அள்ளிக் கொட்டினான். இப்பொழுது நிறைய குவிந்து விட்டது அந்த செல்வத்தை எல்லாம் எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சிறிது நாளைக்கு முன்பு வரை அல்லாஹ்வின் தூதரே எனக்கு என்ன வழி தெரியவில்லை என்று கவலையோடு வந்தார். இப்பொழுது சொல்லுகிறார் பணத்தை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று

அவருடைய வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போனதற்கு என்ன காரணம் ? அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து வழமையாக ஓதி வந்த அந்ததிக்ருதான் !
 

Thursday, September 16, 2021

வாராந்திர புர்தா மற்றும் சிறப்பு பயான் நிகழ்ச்சி 11.09.2021

 


அல்ஹம்துலில்லாஹ் நமது மன்பவுல் ஹஸனாத் மதரசாவில்
கடந்த 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை அன்று மதியம் சிறப்பு நிகழ்ச்சியாக புனித கஸீதத்துல் புர்தா ஓதப்பட்டு சிறப்பு துஆ செய்யப்பட்டது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துகள் அதிகம் ஓதுவதன் மூலமும் புனித கஸீதத்துல் புர்தா ஓதுவதன்  மூலமும் அபிவிருத்திகள் அதிகமாகிய  வரலாறுகள்,