Thursday, September 16, 2021

வாராந்திர புர்தா மற்றும் சிறப்பு பயான் நிகழ்ச்சி 11.09.2021

 


அல்ஹம்துலில்லாஹ் நமது மன்பவுல் ஹஸனாத் மதரசாவில்
கடந்த 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை அன்று மதியம் சிறப்பு நிகழ்ச்சியாக புனித கஸீதத்துல் புர்தா ஓதப்பட்டு சிறப்பு துஆ செய்யப்பட்டது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துகள் அதிகம் ஓதுவதன் மூலமும் புனித கஸீதத்துல் புர்தா ஓதுவதன்  மூலமும் அபிவிருத்திகள் அதிகமாகிய  வரலாறுகள்,

நோய் நொடிகள் சிரமங்கள் நீங்கிய பல அனுபவபூர்வமான உண்மைகள் சொல்லப்பட்டு அதன் பிறகு தவ்பாவும் துஆவும் ஓதி  உலக மக்களின் நன்மைக்காக குறிப்பாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா போன்ற கொடிய நோய்கள் தொற்றுகள் நீங்குவதற்கும் பிரார்த்திக்க ப்பட்டது.


நிகழ்ச்சியை மதரஸா மன்பவுல் ஹஸனாத் பேராசிரியர் மவ்லவி அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி அவர்களும் ஆலிமா அவர்களும் வழிநடத்த, மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
சிறப்புரை நிகழ்த்தி துஆவும் ஓதினார்.

நிகழ்ச்சியில் மதரஸா மாணவிகள் உள்பட அருகில் உள்ள பெற்றோர்கள் தாய்மார்கள் அநேகர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment