أن رجلاً جاء إلى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: تولت عني
الدنيا وقلت ذات يدي، فقال له رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فأين أنت من صلاة الملائكة وتسبيح الخلائق وبها يرزقون» ، قال فقلت: وما هي يا رسول الله؟ قال: «سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله مائة مرة ما بين
طلوع الفجر إلى أن تصلي الصبح، تأتيك الدنيا راغمة صاغرة، ويخلق الله من كل كلمة ملكاً يسبح الله إلى يوم القيامة لك ثوابه»
ஒரு தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே ! இந்த உலகம் என்னை விட்டும் முகம் திருப்பிக் கொண்டது..
பொருளாதாரம் குறைவாக இருக்கிறது" என்று முறையிட்டபோது
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : அனைத்து
வானவர்களும் ஓதக் கூடிய ஒரு பிரார்த்தனை, அனைத்து ஜீவராசிகளும் சொல்லக்கூடிய தஸ்பீஹ் ! அது உனக்கு தெரியாதா ? அதை அனைத்து படைப்புகளும் ஓதுகிற காரணத்தினால்தான் அவைகளுக்கு இரண பாக்கியம்
இறங்குகிறது
"நாயகமே ! அது என்ன ?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி சலாம் சொன்னார்கள்
سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله
சுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ் (100)
இதை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ரு உதயமாகும் நேரம் தொடுத்து பஜ்ரு
தொழுகை முடிகிற அந்த நேரத்திற்குள் நூறு தடவை வழமையாக ஓதி வா ! இந்த உலகம் உனக்காக
பணிந்து வரும் !"
அவர் சொல்கிறார்: இதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் நான்
வழமையாக ஓதிவந்தேன். என்ன ஆச்சரியம் ! அல்லாஹ் என் மீது இரண பாக்கியத்தை அள்ளிக்
கொட்டினான். இப்பொழுது நிறைய குவிந்து விட்டது அந்த செல்வத்தை எல்லாம் எங்கே
வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சிறிது நாளைக்கு முன்பு வரை அல்லாஹ்வின் தூதரே எனக்கு என்ன
வழி தெரியவில்லை என்று கவலையோடு வந்தார். இப்பொழுது சொல்லுகிறார் பணத்தை எங்கே
வைப்பது என்றே தெரியவில்லை என்று
அவருடைய வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போனதற்கு என்ன காரணம் ? அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து வழமையாக ஓதி வந்த அந்ததிக்ருதான் !
No comments:
Post a Comment